நாங்கள் இந்தியாவிற்கு துணை நிற்போம்.. கொரோனா பாதிப்புக்கு பிரான்ஸ் அதிபரின் ஆதரவு!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கிறது. பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டல் மரணங்கள் நடந்து வருகின்றன.
இதனால், கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள் உதவி செய்து வருகின்றன.
அந்த வகையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று இந்தியாவின் கொரோனா பாதிப்பு ஆதரவு நீட்டியுள்ளார்.
மேலும், இதுகுறித்து பேசிய அவர், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்படாதவர்கள் யாருமில்லை. இந்தியா ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.
பிரான்ஸ் மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் மற்றும் 8 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பும். ஒவ்வொரு ஜெனரேட்டரும் சுற்றுப்புறக் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதன் மூலம் ஒரு மருத்துவமனையை 10 ஆண்டுகள் தன்னிறைவு அடையச் செய்யலாம்.
இதனிடையே பிரான்சும், இந்தியாவும் எப்போதும் ஒற்றுமையாகவே இருக்கின்றன. நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். எங்கள் அமைச்சகங்களும், துறைகளும் கடுமையாக உழைத்து வருகின்றன.
பிரெஞ்சு நிறுவனங்கள் ஒன்றிணைகின்றன. நம் நாடுகளுக்கிடையிலான நட்பின் பின்னணியில் இந்த நம்பிக்கை உள்ளது. ஒற்றுமை என்பது நம் தேசத்தின் இதயத்தில் உள்ளது.
இது நம் நாடுகளுக்கு இடையிலான நட்பின் மையத்தில் உள்ளது. நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என இமானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.
हम जिस महामारी से गुज़र रहे हैं, कोई इससे अछूता नहीं है। हम जानते हैं कि भारत एक मुश्किल दौर से गुज़र रहा है। फ्रांस और...
Posted by Emmanuel Macron on Tuesday, 27 April 2021