கடைசி நேரத்தில் மாநாடு பட ரிலீஸிற்கு உதவிய உதயநிதி ஸ்டாலின் - தள்ளிப்போனதற்கு வெளியான காரணம் இதுதான்..!
நடிகர் சிலம்பரசன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரித்த ‘மாநாடு’ திரைப்படம் பல பிரச்னைகளைக் கடந்து நாளை திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், திடீரென மாநாடு படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இறுதியில் இன்று இரவு படத்தின் பிரச்னை தீர்ந்து விட்டது எனவும் படம் நாளை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் எனவும் வெங்கட் பிரவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் ரீலீஸ் குறிப்பிட்ட நேரத்தில் ஆக வேண்டும் என திரைத்துறையினர் மற்றும் சிலம்பரசன் தரப்பு. சில முன்னணித் தயாரிப்பாளர்கள் முன்னிலையில் இதற்காக ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனிடையே, ஏற்கனவே சோனி நிறுவனம் 10.5 கோடி ரூபாய்க்கு மாநாடு படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கிக் கொள்வதாகக் கூறியிருந்தது. அதனால், பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் 10 கோடி ரூபாய் பணம் கடனாகக் கொடுத்து உதவியிருக்கிறார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு சிம்புவுக்கு உதவும் விதமாக, படத்தின் ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் டிவிக்கு வாங்கி அதன்மூலம் ஆறு கோடி ரூபாய் பணத்தைக் கொடுக்க வைத்திருக்கிறார்.
மேலும், சிம்பு படம் பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக, அவர் தற்போது நடித்துவரும் `வெந்து தணிந்தது காடு' படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து, என் மகன் படம் ரிலீஸ் ஆவது கௌரவப் பிரச்சனை என்று சொல்லி, இன்னும் 3 கோடி ரூபாயை படத்திற்கு சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் தருவதாக ஒப்புக் கொண்டதால், கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு படம் திட்டமிட்டபடி நாளை அதிகாலையே ரிலீஸாகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.