குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை... அடுத்தடுத்து அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
குரு மற்றும் செவ்வாய் சேர்க்கையால் 5 மாதத்திற்கு அதிர்ஷ்டத்தினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கிரகங்களின் சேர்க்கையால் எதிர்பாராத பலன்கள் ராசிகளுக்கு ஏற்படும். சில ராசிகளுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைப்பதுடன், சில ராசிகளுக்கு தாக்கமும் ஏற்படும்.
இந்த சேர்க்கை வரும் மாதங்களில் இரண்டு முறை ஏற்படுகின்றது. செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 31 வரை மற்றும் சிம்ம ராசியில் நவம்பவர் 12 முதல் ஜனவரி 24, 2027 வரையும் இந்த சேர்க்கையானது, வரும் மாதங்களில் இரண்டு முறை நிகழ்கிறது. முதலில் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 வரையும் நடைபெறுகின்றது.
இதனால் கூடுதல் வருமானம் மற்றும் பதவி உயர்வு, புதிய வழிகள் இவற்றினை பெறும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையினால் மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன் கிடைப்பதுடன், வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றத்தினையும் அடைய முடியும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைப்பதுடன், தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சரியான நேரமாகும். சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் கிடைக்கும்.

சிம்மம்
குரு மற்றும் செவ்வாய் சேர்க்கையினால் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டமாக இருக்குமாம். வேலையில் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதுடன், வணிகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வளர்ச்சி திட்டங்களும் கிடைக்கும்.
வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பும், நிலம், வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகமும் கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிப்பதுடன், மகிழ்ச்சி, தன்னம்பிக்கையும் அதிகமாகும்.

விருச்சிகம்
குரு மற்றும் செவ்வாய் சேர்க்கையினால் விருச்சிக ராசியினருக்கு நிதி வளர்ச்சி சிறப்பாக இருப்பதுடன், கடன் பிரச்சனைகள் முற்றிலும் தீரும்.
வசதிகள் அதிகரிப்பதுடன், தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் கிடைக்கும். பணியிடத்தில் மேல் அதிகாரிகளிடம் பாராட்டும் கிடைப்பதுடன், போட்டி தேர்விற்கு தயாராகுபவர்களுக்கு சாதகமான நல்ல செய்தி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய சாதனைகளையும் படைப்பீர்கள்.

தனுசு
குரு மற்றும் செவ்வாயினால் தனுசு ராசியினருக்கு தொழில் ரீதியான முன்னேற்றம் இருப்பதுடன், வெளிநாட்டில் வேலை செய்யும் சூழலும் ஏற்படும்.
நல்ல பலன்கள் கிடைப்பதுடன், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உடல்நலத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |