காதலியை தரதரவென்று இழுத்துச் சென்ற காதலன்: பின்பு அரங்கேறிய துயரம்
கேரளாவில் இளம்பெண் ஒருவரை காதலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்தவர் மானசா(24). இவர் எர்ணாகுளம் கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்ததால், அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தோழிகளுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் ராகில் என்பவரை மானசா காதலித்து வந்த நிலையில், பின்பு அவரது நடவடிக்கை பிடிக்காததால்,அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் அடிக்கடி மானசாவிற்கு ராகில் தொல்லை கொடுத்த நிலையில், பெற்றோரிடம் கூறி பொலிசாரிடம் புகார் அளித்து பின்பு எச்சரித்து ராகிலை அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் ராகில், மானசா தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலேயே ஒரு மாதத்திற்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அவரின் நடவடிக்கையினை கண்காணித்து வந்துள்ளார்.
நேற்று தனது தோழிகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த மானசாவிடம் ராகில் பேச முயன்றுள்ளார். பேச மறுத்ததால் மனாசாவை அறைக்கு தரதர வென்று இழுத்துச்சென்று கதவைப் பூட்டியுள்ளார். துப்பாக்கி சத்தம் மட்டும் கேட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த தோழிகள், அக்கம் பக்கத்தினர் உதவியிடம் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் இருவரும் பிணமாக கிடந்ததை அவதானித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மானசாவின் உடலில் இரண்டு குண்டுகளும் ராகில் உடலில் இரண்டு குண்டுகளும் பாய்ந்துள்ளன.
இந்நிலையில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருக்கும் ராகில், ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவர் பிரிந்ததை அடுத்து, மானசாவை காதலித்ததாகவும் கூறப்படுகிறது.
தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற வெறியில், அவர் இப்படி செய்ததாகக் கூறுகின்றனர்.