பட்டுப்போன்ற நீளமான முடி வேண்டுமா? ஹேர் பெக்கில் இந்த 4 பொருள் சேருங்க
நீளமான கூந்தல் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. அனால் தற்போது இருக்கும் சூழ்நிலை காரணமாக எல்லோருக்கும் தலைமுடி எதிர்கிறது. இதற்க ரசாயன பொருட்களின் பயன்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இதை குறைத்து நாம் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து தலைமுடியை பராமரித்தால் அது நம் தலைமுடி ஆரோக்டகியத்தை பாதுகாத்து நீளமான பட்டுப்போன்ற கூந்தலை பெற்று தரும்.
இந்த பதிவில் முழு முயற்ச்சியில் இயற்கை முறையில் கூந்தலை நீளமாகவும் பட்டுபோல வளரச்செய்யும் ஹேர் பெக் பற்றி பார்க்கலாம்.
ஹேர் பெக்
இப்பதிவில் பயன்படுத்தும் ஹேர் பெக் பாட்டி காலத்தில் பய்னபடுத்தப்பட்டு நல்ல பெறுபேற்றை கொடுத்ததாகும். இதற்கு முதலில், ஒரு சிறிய அளவு வெந்தயத்தை தண்ணீரில் இரவில் ஊற வையுங்கள்.
அடுத்த நாள் காலை, அந்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துப் பேஸ்டாக்குங்கள்.
இப்போது, ஒரு பாத்திரத்தில் அந்த வெந்தயப் பேஸ்ட், இரண்டு ஸ்பூன் தயிர், இரண்டு ஸ்பூன் கற்றாழை ஜெல், மற்றும் சிறிதளவு நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த எல்லா இயற்கையான பொருட்களையும் நன்கு கலந்து ஒரு மென்மையான பேஸ்டாக தயாரிக்க வேண்டும். பின்னர், அந்த பேஸ்டை 5 நிமிடங்கள் மூடிவைத்து, பின்னர் தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டும்.
இந்த பேக்கை குறைந்தது அரை மணி நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும். பின்னர் சாதாரண நீரால் அல்லது மைல்ட் ஷாம்பூவால் தலை கழுவிக்கொள்ள வேண்டும்.
இந்த ஹேர் பேக்கை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் முடி மென்மையாகவும், நீளமாகவும் வளரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |