காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கல்லீரல் பத்திரம்
கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான பகுதியாகும். இதில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் உடல் நமக்கு பல அறிகறிகளை காட்டும். அதில் நாம் காலையில் எழுந்தவுடன் எந்ந அறிகுறிகள் காட்டும் என்பதை பார்க்கலாம்.

கல்லீரல்
காலையில் நாம் எழுந்தவுடன் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே நமது நாளை நல்லபடியாக கொண்டு செல்ல முடியும். ஆனால் சிலர் காலையில் எழும்பும்போது மிகவும் சோர்வாக இருப்பார்கள்.
இதை பெரும்பாலும் தூக்கமின்மை, வேலை அழுத்தம் அல்லது வானிலை மாற்றத்திற்கு தான் வருகிறது என புறக்கணிப்பார்கள்.

ஆனால் மருத்துவர்கள் இதுபோன்ற பொதுவான அறிகுறிகள் நமது உடல்நலப்பிரச்சனையாகவும் இருக்கலாம் என கூறுகிறார்கள். நமது உடல் நமக்கு ஏதாவது நோய் இருந்தால் உடல் இதுபோன்ற அறிகுறிகளை தான் முதலில் காட்டுமாம்.
நமது உடலில் மிகவும் முக்கியமான பகுதிகளில் ஒன்று தான் கல்லீரல். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த பதிவில் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நமக்கு இருந்தால் நமது உடல் காலையில் எழுந்தவுடன் சில அறிகுறிகளை காட்டுமாம். அந்த அறிகுறிகள் பற்றி பதிவில் பார்க்கலாம்.

காலையில் தோன்றும் அறிகுறிகள்
கண்களின் மஞ்சள் நிறம்: காலையில் எழுந்தவுடன் கண்ணாடி பார்க்கும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு அப்படி கண்ணாடி பார்க்கும் போது கண்கள் மஞ்சளாக இருந்தால் அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறி. இது உடலில் பிலிரூபின் அதிகரிப்பதால் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை புறக்கணித்தால் ஆபத்து அதிகரிக்கும்.
அசாதாரண சோர்வு மற்றும் பலவீனம்: சராசரி மனிதன் எவ்வளவு தூங்க வேண்டுமோ அவ்வளவு தூங்கி காலையில் எழுந்த பின்னரும் நமக்கு அதிக சோர்வாக இருந்தால் இது கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறி என கூறப்படுகின்றது.

காலை குமட்டல் அல்லது வாந்தி: சிலர் காலையில் படுக்கையை விட்டு எழும்பியவுடன் வாந்தி எடுப்பார்கள். சிலருக்கு குமட்டல் வரும். இதன் காரணம் நமக்கு கல்லீரல் பாதிப்பு இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முகத்தில் அல்லது கண்களைச் சுற்றி வீக்கம்: சிலருக்கு காலை எழுந்தவுடன் முகம் வீங்கி இருக்கும். இதை சிலர் நன்றாக தூங்கி இருக்கிறோம் அதுதான் இப்படி இருக்கிறது என நினைத்து புறக்கணிப்பார்கள். ஆனால் அது தவறு.
இது உடலில் உள்ள புரதம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம் என்றும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
அடர் நிறத்தில் சிறுநீர்: காலையில் சிறுநீரின் நிறம் மிகவும் அடர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகத் வந்தால் அதை எல்லோரும் உடலில் தண்ணீர் குறைபாட்டால் தான் வருகிறது என நினைப்பார்கள். ஆனால் மருத்துவர்கள் இது கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என கூறுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |