10 நாடுகளை இணைக்கும் ஒரே ஒரு நதி.., எது தெரியுமா?
ஐரோப்பாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் டான்யூப் நதி, ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதி ஆகும்.
ஜெர்மனியின் கருங்காடு பகுதியில் உருவாகும் இந்த டான்யூப் நதி கிழக்கு நோக்கிப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது.
வழியில் பல நாடுகளை இணைப்பதால், ஐரோப்பாவின் மிக முக்கியமான நதிகளில் இந்த நதி ஒன்றாக உள்ளது.

டான்யூப் நதி ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோஷியா, செர்பியா, ருமேனியா, பல்கேரியா, மால்டோவா மற்றும் உக்ரைன் ஆகிய 10 நாடுகளை தொட்டுச்செல்கிறது.
இந்த நதி சரக்குப் போக்குவரத்து, சர்வதேச வர்த்தகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், விவசாயத்திற்கு பாசன நீர், நகரங்களுக்கு குடிநீர், தொழிற்சாலைகளுக்கு நீர் மற்றும் நீர்மின் உற்பத்திக்கும் உதவுகிறது.
டான்யூப் நதிக்கரையில் ஆஸ்திரியாவின் வியன்னா, ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா, ஹங்கேரியின் புடாபெஸ்ட் மற்றும் செர்பியாவின் பெல்கிரேட் போன்ற முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன.

டான்யூப் நதி, ரைன் நதியுடன் கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், டான்யூப் டெல்டா பல அரிய பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.
இந்த நதிக்கரையில் உள்ள நகரங்களையும், ஆற்றுப் பயணங்களையும் ரசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.