நீரிழிவு நோய் உங்களை வாழ்நாள் முழுவதும் நெருங்காமல் இருக்கணுமா? இதை செய்தால் போதும்
சரியான உணவு முறை இல்லாததால் பிறக்கும் குழந்தைகள் கூட சர்க்கரை நோயால் பிறக்கின்றனர். 30வயதை தாண்டினாலே நீரிழிவு நோய் வந்துவிடுமா என்று அஞ்சுகின்றனர்.
பழங்காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு சர்க்கரை நோய் என்றாலே என்னவென்று தெரியாது. அவர்களின் உணவு முறைகளே அதற்கு காரணமாய் இருந்துள்ளது.
சரி வாங்க சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
சர்க்கரை நோயை தடுப்பது எப்படி?
பாகற்காய் சர்க்கரை நோய்க்கு உயிர்கொல்லியாக விளங்கி வருகின்றது. பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.
இதில் இயற்கையாகவே பல வித நோய் எதிர்ப்பு சக்திகள் அமைந்துள்ளது. இதனால் தினமும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.
இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து குடிக்க வேண்டும். அந்த தண்ணீரில் உயர் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை உள்ளது.
பார்லி நீரில் அதிகயளவு நார் சத்து உள்ளதால் உடலில் ஏராளமான நன்மைகள் உண்டாக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக இதில் இனிப்புகளை சேர்க்க கூடாது.
வெண்டைக்காயை சுத்தமான நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பால் சேர்த்த பானங்களை தவிர்த்து விட்டு க்ரீன் டீ, புதினா டீ போன்றவற்றை பருகுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.