மார்பக புற்றுநோய்க்கு Letrozole மாத்திரைகள்
மார்பக திசுக்களில் உருவாகும் புற்றுநோயே மார்பக புற்றுநோய், உடலின் அசாதாரண உயிரணு வளர்ச்சியால் இது உண்டாகிறது.
உலகளவில் சுமார் 12 சதவிகித பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், குழந்தைகளின் எண்ணிக்கை, திருமண வயது, மாதவிடாய், மெனோபஸ் போன்றவை மார்பக புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகிறது.
இந்நோய்க்கு தீர்வாக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் Letrozole, இதர சிசிக்சைகளான அறுவைசிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சைகளுடன் இணைந்து Letrozole மாத்திரைகளும் பயன்படுத்தப்படும்.
அதி தீவிர மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புற்றுநோய் செல்கள் பரவாமல் இருப்பதாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதுதவிர குழந்தையில்லாத பெண்களுக்கும் மருந்தாக கொடுக்கப்படுகிறது.
உணவுடன் அல்லது உணவு இல்லாமல் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்வது பலனை தரும். நோயின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுகளில் எடுத்துக்கொள்ளவும்.
மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நாட்களில் நோய் குணமாகும் தன்மையை பொறுத்து மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.
நீங்களாக சுயமாகவோ மருந்துகளின் அளவை அதிகரிப்பதோ அல்லது முன்கூட்டியோ நிறுத்தக்கூடாது.
பக்கவிளைவுகள்
அதிகமாக வியர்ப்பது
கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது
மயக்கம்
எலும்பு மற்றும் மூட்டுகளில் வலி
தலைச்சுற்றல்
இது நீடித்தாலோ அல்லது தீவிரமான பக்கவிளைவாக இருந்தாலோ மருத்துவரை உடனடியாக அணுகவும். இன்னும் பிற பக்கவிளைவுகள் இருந்தாலும் மருத்துவரிடம் செல்லவும்.
கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயாளியாக இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும், osteoporosis நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் மருத்துவரிடம் கூறவும்.
இதுதவிர வேறு மருத்துவ காரணங்களுக்காக மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நபராக இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
கர்ப்பிணி பெண்ணாக இருந்தாலும், தாய்ப்பாலூட்டும் நபராக இருப்பினும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
Letroz மாத்திரைகளை பரிந்துரைக்கும் முன்னர், ரத்தப் பரிசோதனையின் மூலம் வைட்டமின் டி அளவை பரிசோதிப்பது அவசியமாகும்.
மாத்திரைகள் எடுத்துக்கொண்ட பின்னர் வாகனங்கள் இயக்குவதை கண்டிப்பான முறையில் தவிர்த்திட வேண்டும்.
Letroz மாத்திரைகள் எதற்காக?
மார்பக புற்றுநோய், மார்பகத்தில் கட்டிகள், மார்பக காம்புகளில் ரத்தம் கசிதல், மார்பக அளவுகளில் மாற்றம் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
மார்பக புற்றுநோயின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் அவசியமான உடலில் உள்ள ஹார்மோன்களின் உற்பத்தியை குறைப்பதன் மூலம் நோயை குணமாக்குகிறது, மற்ற ஹார்மோன்களுடன் தொடர்பு கொண்டும் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை தடுக்கிறது.
பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் கரு முட்டை வளர்ச்சியை சீராக்குகிறது, ovulation காலத்தின் கருமுட்டையின் வெளியீட்டை தூண்டுகிறது, இதன்மூலம் கருவுறாமைக்கு சிகிச்சையளிக்கவும், துரிதமாக கருத்தரிக்கவும் பயன்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |