கடைசி நிமிடத்திலும் மாறாத புன்னகை: லதா மங்கேஷ்கரின் இறுதி காணொளி
இசை உலகையே தனது குரலால் மயங்கச் செய்த லதா மங்கேஷ்கரின் கடைசி மருத்துவமனை காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவின் இசை மகளாக வலம்வந்த லதா மங்கேஷ்கர், 1942ல் தனது 13வது வயதில் இசை உலகில் கால் பதித்தார். 25 ரூபாய் ஊதியத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்பு ஒரு பாடலுக்கு 40 லட்சம் ரூபாய் வரை வாங்கும் பிரபல பாடகியாக உயர்ந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாததால் யாரையும் அதிகம் சந்திக்க முடியாமல் இருந்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இவரது புன்னகையை மறக்காத அவருக்கு சிகிக்கை அளித்த மருத்துவர், ''லதா ஜியின் உடல்நிலை மோசமடைந்த போதெல்லாம், நான் அவருக்கு சிகிச்சை அளித்தேன், ஆனால் இந்த முறை அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது.
நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை' என்று சோகத்துடன் கூறினார் டாக்டர் சம்தானி. இந்த புன்னகை அரசி மறைந்தாலும் அவரது பாடல் எப்போதும் நம்மை ஆட்சி செய்யும் என்று கூறியுள்ளார்.
தற்போது லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காணொளி வெளியாகி வைரலாகி வருகின்றது.
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். தற்போது இவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் யாருக்கு போகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழும்பி வருகின்றது.