20 நாட்களுக்கு முன்னரே போட்ட தடுப்பூசி.. விவேக்கிற்கு ஏற்பட்ட அதே நிலைமையா? எழுந்த சர்ச்சை
பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்த விஷயம் திரையுலக ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்துள்ளனர்.
இதனிடையே, கே வி ஆனந்த்திற்கு கொரோனா நெகட்டீவ் என ரிசல்ட் வந்துள்ளது. இப்படியான நேரத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
அதன்பின்னர் தனிமையில் இருந்த இவருக்கு நேற்றுமூச்சுத்திணறல் ஏற்பட்டு நெஞ்சு வலி இருந்ததால் தானாகவே காரை எடுத்து சென்று மருத்துவனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்.
ஆனால், சிகிச்சை எடுத்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தற்போது, அவரது உடலை பரிசோதித்து பார்க்கையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும், விவேக் மரணத்திற்கு பிறகு கேவி ஆனந்த் மரணமும் தடுப்பூசி சர்ச்சையில் சிக்கியுள்ளது.