நீரிழிவு நோயை துரத்தி அடிக்க வேண்டுமா? ஒரே ஒரு உணவு செய்யும் அற்புதம்
இன்றைய தலைமுறையினர் தற்போது துரித உணவுகளை விட்டுவிட்டு பாரம்பரிய பழைய உணவுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
அதில் ஒன்று தான் குதிரைவாலி அரிசி. இந்த குதிரைவாலி அரிசியில் நெய் சோறு எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை
குதிரைவாலி அரிசி - ஒரு கப்
நெய் - 4 டீஸ்பூன்
புதினா இலைகள் - கால் கப்
முந்திரி, திராட்சை - தலா 5
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 2 கப்
கிராம்பு - ஒன்று
சோம்பு - கால் டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
பிரியாணி இலை, மராத்தி மொக்கு - தலா ஒன்று
செய்முறை
குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாய் அகன்ற பாத்திரத்தில் நெய்விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, மராத்தி மொக்கு போட்டு தாளித்து, அதனுடன் முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவம்.
பின்பு பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, புதினா இலைகள் சேர்த்து வதக்கிய பின்பு, குதிரைவாலி அரிசி, உப்பு, தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி மூடிபோட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
5 நிமிடங்களுக்குப் பின்னர் திறந்து, கிளறி மீண்டும் 5 நிமிடங்கள் மூடி வைத்து இறக்கி பரிமாறவும். குக்கரில் செய்வதாக இருந்தால் ஒரு விசில் விட்டு இறக்கி பரிமாறலாம்.