திடீரென சீரியலுக்கு ரீஎன்ட்ரி கொடுத்த குஷ்பு.. வைச்சு செய்த நெட்டிசன்களில் ட்ரோல் காட்சி!
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கோகுலத்தில் சீதை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டராக இருந்த நந்தாவும், கதாநாயகியாக புதுமுக நடிகை ஆஷா கவுடாவும் நடித்து வருகின்றனர்.
இதையடுத்து, இந்த தொடருக்கு இன்னும் மவுசு சேர்க்கும் விதமாக நடிகை குஷ்பூ இணைந்துள்ளார்.
மேலும், 90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அவர், கதாநாயகி அந்தஸ்துக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பின்னர் சின்னத்திரையில் கால்பதித்த குஷ்பு, குங்குமம், கல்கி உள்ளிட்ட பல தொடர்களில் வரிசையாக நடித்தார்.
பின்னர், அரசியலிலும் பிரபலமாக இருந்தார். அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில், மீண்டும் நடிப்புக்கு திரும்பியிருக்கும் அவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கோகுலத்தில் சீதை’ நாடகத்தில் ‘மங்களம்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
மருத்துவரான மங்களம், பொறுப்புள்ள, தைரியமான பெண்ணாக இருக்கிறார். இதைக்கண்ட நெட்டிசன்கள் வைரலான ட்ரோல் காட்சியினை வெளியிட்டுள்ளனர்....