தமிழர்களின் பூர்வீக பூமி! இலங்கையில் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் சாட்சியங்கள்
முல்லைத்தீவு என்பது இலங்கையில் தமிழர்களுக்கு உணர்வு ரீதியாக மிகவும் நெருங்கிய பகுதியாக காணப்படுகிறது.
முல்லைத்தீவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை நாம் பறிகொடுத்திருந்தோம்.
அங்கு உயர்ந்து நிற்கும் மரங்களும், பரந்து கிடக்கும் மணல் தரையும் எம் உறவுகள் இரத்தம் சிந்தியதற்கான இயற்கை சாட்சியங்களாக பூமியில் நிலைப்பெற்றுள்ளன.
இன அழிப்பு, கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல்போகச் செய்யப்பட்ட உறவுகள் என பல்வேறு சோக வரலாறுகளை கொண்டு அமைந்துள்ள முல்லைத்தீவில் குமுழமுனை கிராமத்திலிருந்து 3.5 மைல் தொலைவில் தண்ணிமுறிப்பு குளத்துக்கு இடப்பக்கமாக குமுழமுனைக் கிராமத்தின் எல்லைகள் கொண்டமைந்த இடமே குருந்தூர் மலை.
குருந்தமரம் எனும் ஒருகை மரம் இப்பகுதியில் அதிகளவில் காணப்பட்டமையால் குருந்த மலை என பெயர் பெற்று காலப்போக்கில் குருந்தூர் மலை என்ற பெயர் தோன்றியதாக எழுதப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.