கோவில் பிரசாதம் பாணியில் நாவூரும் புளியோதரை! வீட்லேயே எப்படி செய்வது?
நாம் என்னதான் வீட்டில் பார்த்து பாத்த்து புளியோதரை செய்தாலும் கோவிலில் செய்யும் அளவுக்கு சுவையாகவும் அந்த தெய்வீக மணத்துடனும் கிடைப்பது கடினம்.
அச்சு அசல் கோவில் பிரசாதம் பாணியில் எவ்வாறு வீட்டிலேயே எளிமையான முறையில் புளியோதரை ரெடிமிக்ஸ் தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
கொத்தமல்லி விதைகள் - 2 தே.கரண்டி
எள்ளு - 2 தே.கரண்டி
மிளகு - 1தே.கரண்டி
வெந்தயம் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
சிவப்பு மிளகாய் - 10 - 15
புளி - ஒரு எலுமிச்சங்காய் அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை எண்ணெய் சேர்க்காமல் பொன்நிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கொத்தமல்லி விதை வெந்தயம், மிளகு, சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து இதையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தில் கறிவேப்பிலையை நன்றாக சூடாக்கி உலர வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைசலை சேர்த்து நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு இதில் சிறிதளவு உப்பு சேர்த்து, நன்றாக ஆரிய பின் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது கொரகொரப்பான பத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கடுகு கடலைப்பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சேர்த்தால் சுவையான புளியோதரை பொடி தயார்.
அதன் பின்னர் சாதம் வடித்து அதில் தேவையான உப்பு, நல்லெண்ணெய் கலந்து, தேவையான அளவு பொடியையும் போட்டு கலந்தால் கோவில் பாணியில் சுவையான புளியோதரை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |