நாகமணியை பாதுகாக்கும் ராஜநாகம்... கேமராவில் சிக்கிய அற்புதமான காட்சி இதோ!
நாகப்பாம்பு ஒன்று நாகமணியை பாதுகாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
பொதுவாக நாகமணி நம்மிடம் இருந்தால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும், பல கோடிகளுக்கு அதிபதியாகவும் சக்ரவர்த்தியாகவும் வாழலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும், 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கிற பாம்பின் விஷம்தான் ஒரு கட்டத்தில் இறுகி நாகமணியாக மாறுவதாக சிலர் சொல்கிறார்கள்.
ஆனால், சிலர் அதனை நாக ரத்தினம் எனவும் சொல்கிறார்கள். எனினும் நாக மணி தொடர்பான மர்மங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், பளப்பளப்புடன் காணப்படும் நாகமணியை பாதுகாக்கும் ராஜ நாகம் ஒன்றின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.