நடுரோட்டில் உயிருக்கு போராடிய குழந்தை! கதறிய பெற்றோர்- அடுத்த நடந்த பரபர சம்பவம்
திருவாரூரின் சன்னாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவரது மனைவி மெல்மா.
இவர்களது ஒன்றரை வயது குழந்தையான சுகன்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
காய்ச்சலால் அவதிப்பட்ட சுகன்யாவை அழைத்து கொண்டு பெற்றோர் மருத்துவமனைக்கு கிளம்பியுள்ளனர்.
அப்போது, சன்னாநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது பைக் ரிப்பேர் ஆனது.
தொடர்ந்து சுகன்யாவுக்கு வலிப்பு வர, உயிருக்கு போராடியுள்ளார், மகளை கையில் ஏந்தியபடி பெற்றோர் கதறித்துடித்துள்ளனர்.
ஊரடங்கு நேரத்தில் ஆட்டோ கார் எதுவும் இல்லாத நிலையில், குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அழுது கொண்டு சாலையோரம் நின்றுள்ளனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலிஸார் உடனடியாக ரோந்து வாகனத்தில் குழந்தையை அழைத்துக்கொண்டு நன்னிலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
அந்த மருத்துவர் சரியான நேரத்தில் குழந்தையை கொண்டு வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது என்று கூறியுள்ளார்.
இதனால் பொதுமக்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனும் போலிஸாரை பாராட்டியுள்ளனர்.