சுற்றுலாவுக்கு தமிழகத்திற்கு வந்த தம்பதிகள் விடுதியில் செய்த செயல் - சிக்கிய உருக்கமான கடிதம்!
கேரளாவில் இருந்து வந்த தம்பதிகள் பழனியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூல் பகுதியை சேர்ந்தவர் சுகுமாறன்(66). இவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரின் மனைவி சத்தியபாமா(62).
கடன் தொல்லை
இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதனிடையே வங்கியில் கடன் பெற்று கட்ட முடியாமல் சுகுமாறன் திணறி வர குடும்பத்தில் பிரச்சினைகள் வெடித்துள்ளது.
இதனால், சுகுமாறன் மனைவி சத்தியபாமாவும் கொடைக்கானல் உறவினர்கள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, தமிழ்நாட்டின் பழனிக்கு வந்து தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
தற்கொலை
சாமியை தரிசனம் செய்துவிட்டு, பின்னர் இரவு உணவு முடித்துவிட்டு விடுதி அறைக்கு சென்றுள்ளனர். பின் இரவில் மின்விசிறியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிக்கிய கடிதம்
தொடர்ந்து விசாரணை நடத்தகையில், அவர்களுக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், “தங்களுக்கு வங்கி கடன் பிரச்சினை உள்ளதாகவும், அதை கட்டமுடியாமல் தற்கொலை முடிவு செய்துகொண்டதாகவும், இதற்கு யாரும் காரணம் இல்லை.
என்று மலையாளத்தில் உருக்கமாக எழுதி வைத்திருந்தனர். இத்தகவலானது அவர்களின் குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.