22 ஆண்டு கால விசுவாசம்: திடீரென கோடீஸ்வரராக மாறிய தொழிலாளி! நடந்தது என்ன?
தனது நிறுவனத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர் ஒருவருக்கு முதலாளி ஒருவர் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஏ.கே.ஷாஜி என்பவர் மைஜி என்ற மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார். குறித்த நிறுவனத்தில் சுமார் 22 ஆண்டாக பணியாற்றி வருபவர் தான் அனிஷ். இவர் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், அனிஷின் 22 ஆண்டுகால விசுவாசத்திற்கு பரிசாக 1 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்றை முதலாளி பரிசாக அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஷாஜி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கடந்த 22 ஆண்டாக எனக்கு ஒரு வலுவான தூணாக இருக்கிறீர்கள். தற்போது புதிய பயணக் கூட்டாளியை நீங்கள் நேசிப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், அனீஷ் குடும்பத்துக்கு அளித்த காருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே, ஷாஜி கடந்த இரு ஆண்டுக்கு முன் 6 ஊழியர்களுக்கு தலா ஒரு காரை பரிசாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
