மாறி மாறி ஆர்த்தியை கடுப்பேற்றும் கெனிஷா - ரவி மோகன்... என்ன பண்ணிருக்காங்கன்னு பாருங்க!
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து சர்ச்சை தான் சமீக காலமாக இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் சர்சையின் முக்கிய புள்ளியான பாடகி கெனிஷா கூலாக செய்திருக்கும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரவி மோகன் - ஆர்த்தி ரவி
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். இவரின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில், இன்னொரு விஷயமும் வெளியானது. அது ஒரு புகைப்படம் ஆகும். இதில் அவர் கோவாவை சேர்ந்த கெனிஷா என்ற பாடகியுடன் இருந்தார்.
இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து அனைத்து ஊடகங்களும் இருவரும் காதலிக்கின்றனரா என கிசுகிசுக்களை பரப்ப தொடங்கின.
இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்றும், அதைத்தாண்டி தங்களுக்குள் ஒன்றும் இல்லை என்றும் கூறினர். ஆனால் அண்மையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணம் நடந்தது.
இதில், கோல்டன் நிற ஆடை அணிந்து ரவி மோகனும் கெனிஷாவும் கலந்து கொண்டனர். போதாக்குறைக்கு இருவரும் கைக்கோர்த்துக்கொண்டு வேறு சென்றனர்.
இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.அதனால் ஆர்த்தி ரவி மீண்டும் புதிய அறிக்கையை வெளியிட்டு ரவி மோகனை வறுத்தெடுத்தார்.
அதனை தொடர்ந்து, தான் முதுகில் குத்தப்பட்டுவந்ததாகவும் தற்போது நெஞ்சில் குத்தப்படுவதாகவும் குறிப்பிட்டு ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் முதுகில் குத்தப்படதாக குறிப்பிடப்டடது மற்றும் சொத்துகளை அபகரித்தாக குறிப்பிட்டது அனைத்தும் பொய் ஒரு ரூபாயால் ரவி மோகன் ஏமாற்றப்பட்டிருந்தால் கூட ஆதாரத்தை வெளியிடட்டும் என் ரவி மோகனனின் மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா ரவி மோகனுக்கு சவால் விடும் தொணியில் அறிக்கை வெளியிட்டதுடன், தான் இன்னும் தனது மாப்பிள்ளையை மகனாகவே நினைப்பதாகவும் ஆர்த்தியுடன் சேர்ந்து வாழும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே ரவி மோகன் வெளியிட்ட பதிவு என்னுடைய "வாழ்வின் ஒளி" என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு நேற்று முன்தினம் ஆர்த்தி வெளியிட்ட பதிவில், "உங்கள் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவரால் தான் எங்களுடைய வாழ்க்கையில் இருள் வந்துவிட்டது" என்று கூறி இருந்தார்.
அதுபோல "கணவன் மனைவிக்குள் பிரச்சனை என்றால் பெற்றோர் வீட்டிற்கு செல்லாமல் எதற்காக நம் குடும்பத்திற்குள் பிரச்சனை வருவதற்கு காரணமாக இருந்த பெண் வீட்டிற்கே போக வேண்டும்" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
கெனிஷாவின் கடுப்பேற்றும் செயல்
இதற்கிடையில் கெனிஷா கொஞ்சமும் பதற்றம் இன்றி கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு.... என்ற பாடலை தன்னுடைய பாணியில் பாடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அது ஒரு புறம் இருக்க, விளையாட்டு தொலைபேசியில் ரவி மோகன் கோல் பேசுவது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவை அனைத்தும் மேலும் மேலும் ஆர்த்தி ரவியை கடுப்பேற்றும் நோக்கில் செய்யப்படுவது போல் தான் இருக்கின்றது என இணையத்தளவாசிகள் கருத்து தெவித்து வருகின்றனர்.
