“இனி வரப்போற காலம் நமக்கானது” - ரவி மோகனுக்காக கெனிஷாவின் புதிய பதிவு
கெனிஷா தற்போது தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி அதற்கு என் எலமே நீதான் என ரவிமோகளை புகழ்ந்து தள்ளிய பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
ரவி மோகன்
ரவி மோகனுக்கும் ஆர்த்தி ரவிக்கும் விவாகரத்து என தகவல் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் ரவி மோகன்.
இவரின் மனைவி ஆர்த்தி ரவி. இவர், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டு விலகிய பின்னர் ரவி மோகன் என தனது பெயரையும் மாற்றி கொண்டார்.

ரவி மோகன் ஆர்த்தியை பிரிந்ததில் இருந்து பாடகி கெனிசாவுடன் ஊர் சுற்றி போஸ்ட் செய்து வருகிறார்.
இவர்கள் ஒரு பக்கம் இப்படி இருக்க ஆர்த்தி ரவி தன் பிள்ளைகளுடன் சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்ட் போட்டு தனிமை வாழ்க்கை நல்லா இருக்கு என பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பிறந்தநாளை கொண்டாடிய கெனிஷா தனது இன்டாகிராம் பக்கதில் ரவிமோகன் பற்றி புகழ்ந்து தள்ளி உள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கெனிஷா பதிவு
தன்னுடைய வாழ்க்கையில் அவருக்கு அன்பும் மரிஜயாதையும் கிடைத்ததே இல்லையாம். ரவி மோகன் தனது வாழ்க்கையில் வந்த பிறகு, தன்னுடைய எண்ணங்களும் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையும் மாறியுள்ளதாக அவர் கூறி உள்ளார்.
எப்போது நம் அன்பு நம்மிடம் இருக்கும். சின்ன வயசில இருந்து என்னை எல்லோரும் ஒதுக்கி வச்சாங்க. நா பெருசா எல்லாம் எதிர்பாக்க மாட்டேன். எனக்கு தேவை அன்பும் மரியாதையும் தான் அதை யாரும் கொடுக்க மாட்டார்கள்.
நா எனக்கு புடிச்ச மாதிரி எப்ப வாழ ஆரம்பிச்சேனோ அப் தான் இந்த எலகம் என்னை மதித்தது கொண்டாடியது. நீ வந்த பிறகு என் உலகமே மாறி விட்டது.

இதை மற்றவர்கள் எப்படி வேண்டும் என்றாலும் நினைக்கட்டும். நீ என் வாழ்க்கையில் வந்த பின்னர் என்னோட எண்ணங்கள், செயல்கள், காதல் பத்தின என்னோட பார்வை எல்லாம் புதுசா இருக்கு. நம்மளை தெரிந்தவர்களுக்கு நாம் எப்படி பட்டவர்கள் என்று தெரியும்.
நீ என்னோட கஷ்டத்திலும் இருந்து இருக்க அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. எனக்கு எவ்வளவு கசப்பான விடயங்கள் இருந்தாலும் என் பிறந்தநாளை அன்பால் நிறைய வைத்ததற்கு நன்றி.
இனி வரப்போற காலம் நமக்கானது அதை நினைச்சு எனக்கு பயம் இல்லை. அந்த எதிர்காலத்தில் இன்னும் உன் கூட சேர்ந்து ரொம்ப சந்தோஷமா ஜாலியா ஒரு ஆட்டம் போட்டுக்கிட்டே இருப்பேன் என்று கெனிஷா பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |