மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல.... வைரலாகும் கெனிஷா- ரவி மோகன் அலப்பறைகள்!
ரவிமோகன், ஆர்த்தி ரவி மற்றும் கெனிஷா ஆகியோருக்கு இடையிலான சர்ச்சை விவகாரத்தில் நேற்றைய தினம் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதன்போது ஆர்த்தியுடனான தனது திருமண வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகள் மற்றும் பல விடயங்களை வெளிப்படையாக பேசியது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவி மோகன் சர்ச்சை
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில், உள்ள நிலையில், சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கெனிஷாவை ரவி மோகன் மேடையில் வைத்து கட்டியணைத்தது, மற்றும் மேடை ஏறும் முன் ரவி மோகனின் காலில் விழுந்து ஆசி பெற்றுச் சென்ற காட்சி, இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே, சமூக வலைதளங்களில் தனது பதிவுகளில் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களுக்கு கெனிஷா பதிலடி கொடுத்து வந்தார்.

இதனால் ஆர்த்தி குறித்து கெனிஷா அவதூறாகப் பேசுவதாக குற்றம்சாட்டி, ஆர்த்தி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கில், எந்த ஊடகத்திலும் ஆர்த்திக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் கெனிஷாவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தடை உத்தரவைத் தொடர்ந்து, ‘நடிகர் ரவி மோகனின் குடும்பத்தைப் பிரிக்க வந்தவர்’ எனத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கெனிஷா, இன்ஸ்டாகிராமில் அதிரடி வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் சென்னையை விட்டே வெளியேறுவதாகவும், அனைத்து சமூக ஊடகங்களில் இருந்தும் வெளியேறுவதாகவும் காணொளியை வெளியிட்டுவிட்டு அனைத்தையும் முடிக்கினார்.

அதன் பின்னரே ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து தன்பக்க நியாயத்தை கண்ணீர் மல்க வெளிப்படுத்தினார்.
அதனால் ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக பேசியவர்கள் கூட ரவி மோகன் பக்கம் தான் நியாயம் இருப்பதாக பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் செய்த அளப்பறைகளை பறைசாற்றும் வகையில் ஒரு காணொளி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |