உலகையே வாய்பிளக்க வைத்த தமிழன்!! 2600 ஆண்டுகள் பழமையான புகைப்படங்களின் தொகுப்பு
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தின் நவீன நாகரீகத்துடன் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழாய்வில், உறை கிணறுகள், பாசி மணிகள், தங்கம் - வெள்ளியிலான ஆபரணங்கள், எழுத்துக்கள் கண்டறியப்பட்டன.
கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை (53%) காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை.
ஆகவே கீழடியில் வாழ்ந்த சமூகம் பெரும்பாலும் ஆடு, மாடுகளை வளர்த்த சமூகமாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும் இங்கு கிடைத்த ஓடுகள், செங்கற்கள், காரை ஆகியவற்றில் மண், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீசியம், அலுமினியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பெண்கள் பயன்படுத்திய தங்கத்தாலான ஏழு ஆபரணத் துண்டுகள் கிடைத்துள்ளன. பல்வேறு மதிப்புமிக்க கற்களால் ஆன வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு பல விளையாட்டுப் பொருட்கள் குறிப்பாக ஆட்டக்காய்கள், தாய விளையாட்டிற்கான பகடைக்காய்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை பெரும்பாலும் சுட்டமண்ணால் ஆனவை.
இதன் மூலம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் நவநாகரீகத்துடன் வாழ்ந்தது தெரியவந்துள்ளது, இதற்கான புகைப்படங்கள் தொகுப்பு,














