யாருக்குமே தெரியாத பாரதியின் ரகசியத்தை கண்டுப்பிடித்த ஆட்டோ அண்ணா!
பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுயின் அப்பா பாரதி என்ற ரகசியத்தை ஆட்டோ டிரைவர் கண்டுப்பிடிப்பது கண்ணம்மாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை உண்மை தெரிந்த பின்பு தினம் தினம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அஞ்சலியின் சீமந்தத்தில் கண்ணம்மா குழந்தை பற்றி கேட்டு பிரச்சனை செய்வாள் என்று சவுந்தர்யா பயப்பட ஒருவழியாக பிரச்சனை ஏதும் இல்லாமல் சீமந்தம் முடிந்தது. ஆனாலும் கண்ணம்மா விடுவதாக இல்லை.
அத்தை சவுந்தர்யாவிடம் குழந்தை பற்றி கேட்க, அவரோ எதோ ஏதோ சொல்லி கண்ணம்மாவை சாமாளிக்கிறார். ஆனாலும் கண்ணம்மாவுக்கு நம்பிக்கை வரவில்லை.
அதனால் அஞ்சலியிடம் ஃபோன் பண்ணி கேட்ட கண்ணம்மாவுக்கு இன்னும் குழப்பம் தான் அதிகம் ஆனது. கண்ணம்மாவுக்கு பிரசவம் நடந்த அதே நாளில் சவுந்தர்யா ஆசிரமத்தில் இருந்து ஒரு குழந்தையை தூக்கிட்டு வந்த உண்மையை அஞ்சலி சொல்ல, கண்ணம்மாவுக்கு குழப்பத்தில் தலை வெடிக்கிறது.
இதனால் அடுத்ததாக துளசியை பார்க்க ஹாஸ்பிட்டல் போகிறாள் கண்ணம்மா, ஏற்கெனவே துளசியை பார்த்து கண்ணம்மாவுக்கு விஷயம் தெரிந்தது பற்றி சவுந்தர்யா சொல்ல, துளசியும் கண்ணம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருந்தார்.
துளசியிடம் அடுத்தடுத்த கேள்விகளால் கண்ணம்மா விசாரணை செய்ய, துளசி தெரியாது என்றே பதிலில் முடிவாக இருந்தார். நேற்றைய எபிசோடு இதோடு நிறைவடைய, இன்றைய எபிசோடில் துளசியிடம் கண்ணம்மா அழுகிறார். ”என்னுடைய இன்னொரு குழந்தை எங்க இருக்கு, எனக்கு மட்டும் ஏன் இப்படி மாறி மாறி கஷ்டம் வருது”ன்னு துளசியிடம் மனம் விட்டு அழுகிறார்.
கண்ணம்மாவின் அழுகையைப் பார்த்து கஷ்டப்படும் துளசி, சவுந்தர்யாவுக்கு பண்ணி கொடுத்த சத்தியத்தை எண்ணி உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
இந்த பக்கம் பாரதி, ஹேமாவை வெண்பாவின் வீட்டுக்கு கூடிட்டு போறான். ஹேமாவுக்கு டிரஸ் எடுக்க வேண்டும் என்ற சாக்கில் வெண்பாவை சந்திக்க சென்றவன், மனதில் இருக்கும் குழப்பங்களை உலறி தள்ளுகிறான்.
நேற்றைய தினம் சவுந்தர்யாவும் துளசியும் தனியாக சந்தித்து பேசியதை பாரதி பார்த்ததை வெண்பாவிடம் கூறுகிறான்.
எதோ ஒரு ரகசியத்தை இவர்கள் மறைப்பதாகவும், ”அந்த துளசி கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்தவள் அவளுடன் அம்மா இப்படி நெருக்கமாக பேச என்ன காரணம்?” என தனது சந்தேகங்களை வெண்பாவுக்கும் பரவி விடுகிறான். பின்பு மூவரும் கடைக்கு கிளம்புகிறார்கள்.
பிரசவ நாளை எண்ணி பயப்படும் அஞ்சலிக்கு சாமியே வந்து வாக்கு சொல்வது போல் கைரேகை பார்ப்பவர் ஒருவர் வீட்டுக்கு வருகிறார். ஆரம்பத்தில் வேண்டாம் என்று சொன்ன அஞ்சலி, அவரின் அடுத்தடுத்த வார்த்தை ஜாலங்கலை கேட்டவுடன் மனம் மாறி கையை நீட்டுக்கிறார்.
அஞ்சலியின் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனையை கூடவே இருந்து பார்த்தது போல அந்தம்மா சொல்ல சொல்ல அஞ்சலியின் முகம் மாறுகிறது. விடை இல்லா அஞ்சலியின் குழப்பத்திற்கு விடை கிடைக்கும் நேரத்தில் அகிலன் வந்து ஆட்டத்தை களைக்கிறான்.
கைரேகை பார்ப்பவரையும் திட்டி அனுப்பிவிடுகிறான். ஏற்கெனவே பயத்தில் இருக்கும் அஞ்சலியை இதுபோன்ற நம்பிக்கைகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுருத்துகிறான்.
இது எல்லாம் போக, வீட்டில் குழந்தை பற்றியே குழப்பத்துடனே இருக்கும் கண்ணம்மாவை பார்க்க பக்கத்து வீட்டு ஆடோக்கார அண்ணா ராஜா வருகிறார். லட்சிமியை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர் அவர் தான்.
யாருக்குமே தெரியாது என கண்ணம்மா மறைத்து வைத்திருக்கும் ரகசியம் ஒவ்வொன்றையும் அசால்ட்டாக அவிழ்க்கிறார்.
பாரதி தான் லட்சுயின் அப்பா, சவுந்தர்யா குடும்பம் தான் கண்ணம்மாவின் சொந்த்தக்காரர்கள் என அனைத்தும் தெரிந்தது போலவே அவர் கூறும் உண்மைகளை கேட்டு கண்ணம்மா மனம் பதறுகிறது. கடைசியாக அவர் சொன்ன வார்த்தை கண்ணம்மாவின் மனதை விட்டு அகலவில்லை. ”ஹேமா கண்டிப்பாக உன் குழந்தை தான்.. முகத்தை பார்த்தாலே தெரியுது” ஏற்கெனவே சந்தேகத்தில் இருந்த கண்ணம்மாவுக்கு உறுதியாக தோன ஆரம்பித்தது. ’ஹேமா நம்ம குழந்தையா இருப்பாலா”ன்னு. கூடிய விரைவில் அந்த கேள்விக்கும் பதில் கிடைத்துவிடும்.