Singappenne: மித்ராவிற்கு கருணாகரன் கொடுக்கும் நெருக்கடி... மகேஷிற்கு ஏற்பட்ட சந்தேகம்
சிங்கப்பெண்ணே சீரியலில் கருணாகரன் மித்ராவிற்கு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், ஆனந்தி அன்பு இடையே தற்போது ஒரு நட்பு தொடங்கியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அன்பு தனது கழுத்தில் தாலி கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், மகேஷின் ஏற்பாடால் தற்போது தேனிலவிற்கு சென்றுள்ளனர்.

தேனிலவு சென்ற இடத்தில் ஆனந்தியைக் கொலை செய்வதற்கு துளசி இரண்டு முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் இதிலிருந்து அன்பு அவரைக் காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில், மித்ராவிற்கு கருணாகரன் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்கின்றார். இதனை அன்பு அவதானித்த நிலையில், அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மற்றொரு புறம் அன்பு மற்றும் ஆனந்தி பழைய மாதிரி தங்களது அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். துளசியின் அடுத்த சதி திட்டம் என்ன? அன்பு அதனை முறியடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |