திருமணம் முடிந்த அடுத்த நாளே சினேகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்
திருமணம் முடிந்த மறுநாளே படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதை மனமகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் கவிஞர் சினேகன்.
தமிழ் திரைப்படங்களில் சுமார் 700 படங்களுக்கு மேல் பாடல் வரிகளை எழுதி பிரபலமாகியவர் சினேகன்.
கவிஞர் சினேகன்- கன்னிகா ரவியின் திருமணம் கடந்த 29ம் தேதி கமல்ஹாசன் தலைமையில் நடந்து முடிந்தது.
இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாள் தான் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் "ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற படத்தில் நடித்ததும்.
— Snekan S (@KavingarSnekan) August 2, 2021
அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
திருமணம் திருப்பம் தரும்
என்பது உண்மைதானோ...🥰 pic.twitter.com/dX6UsiUoxm
அதில், திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் "ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற படத்தில் நடித்ததும்.
அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ என மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், கன்னிகா சினேகனுடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், எங்களுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று கோபித்து கொள்ளாதீர்கள் எனவும் எனது முதல் காதல் கல்யாணத்திற்கு பின்னும் தொடர்கிறது என்று கூறியுள்ளார்.