படப்பிடிப்பில் கதறி துடித்த பிரபல நடிகை: பெரிய மனுஷன் செய்ற காரியமா இது? பிரபல நடிகரை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியல் நடிகை படப்பிடிப்பில் பிரபல நடிகர் செய்த குறும்புத்தனத்தினால் கதறி கூச்சல் போட்டுள்ளார்.
இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. முதல் மனைவிக்கு பிறந்த மகள் மீராவை ராசி இல்லாதவர் என சொல்லி ஒதுக்கி வைத்திருக்கிறார் அப்பா கௌதம்.
அப்பா பாசத்திற்காக ஏங்கும் மகள், அவர்களை சேர்ந்து வைக்க முயற்சிக்கும் குடும்பம், அதனால் வரும் பிரச்சனைகள் என விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.
இதில் மீராவாக நடித்து வரும் நிமிஷிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அவரது கணவர் யுவா ரோலில் நடிக்கும் ராகுல் ரவியும் இளசுகளை கவர்ந்தவர் தான்.
இந்நிலையில் மீராவாக நடித்து வரும் நிமிஷிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் கதறி இருக்கிறார். அதற்கு காரணம் அப்பா கௌதம் ரோலில் நடித்து வரும் நடிகர் பப்லு தான். அவர் பாம்பு போல ஊர்ந்து சென்று மீராவை பின்னால் இருந்து பயமுறுத்தி இருக்கிறார். அதனால் தான் நிமிஷிகா கத்தி கூச்சல் போட்டுள்ளார். இக்காட்சியினை நடிகர் பப்லு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.