ராணி எலிசபெத் கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ் திரைப்பட விழா! இறுதி வரை கனவு நிறைவேறாத சோகம்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் நேற்று காலமான நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் ’மருதநாயகம்’ திரைப்படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு தனது இரங்கலை கமல்ஹாசன் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன்.

ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான். 5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது.
தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பெருமிதத்துடன் உலகநாயகன் பதிவிட்டுள்ளார்.
இரண்டாம் எலிசபெத் ராணி கலந்து கொண்ட தமிழ் படம் இறுதி வரை திரைக்கு வரவே இல்லை.. இனியும் வருமா என்பது பலரது கேள்வியே.
எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். (1/3) pic.twitter.com/EFmKfqls7U
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2022