இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர்
பிரபலங்களை பற்றி அவதூறாக பேசி சர்ச்சைகளை சிக்கி வரும் பயில்வான் ரங்கநாதன் குறித்து பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.
80 மற்றும் 90-களில் காமெடி நடிகராகவும், வில்லன் போன்ற குணச்சித்திர வேடத்திலும் நடித்த பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு பத்திரிக்கையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவதால் இவரது youtube தளத்தை முடக்க வேண்டும் என்றும், இவரை கைது செய்ய வேண்டும் என சில பிரபலங்கள் கூட போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
சமீபத்தில் கூட நடிகர் மீனாவின் கணவர் இறந்தது குறித்து பல்வான் ரங்கநாதன் பேசியது பலரையும் ஆதங்கப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
கலா மாஸ்டர் காட்டம்
பயில்வான் ரங்கநாதன் பேச்சு குறித்து, பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர் கூறுகையில்,
"ஒரு நடிகரோ, அல்லது நடிகையோ திரைப்படத்தில் நடிக்கவில்லை என்றால் அவர்களை பற்றி விமர்சனம் செய்து பேசுவது தவறு இல்லை. அவர்கள் சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வரவில்லை என்றால் அதைக் கேட்பதும் தவறு கிடையாது.
ஆனால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பற்றி பேசுவது மிகவும் தவறான விஷயம்.
அது அவர்களை மட்டும் காயப்படுத்தாமல், அவர்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட அனைவரையும் வேதனைப்படுத்தும் செயல்.
அப்படி ஒருவரை காயப்படுத்தி பேசுவதால் என்ன சந்தோஷம் கிடைக்கப் போகிறது. நான் அது போல் யாரையும் பேச மாட்டேன், அதுபோன்று பேசுபவர்களின் youtube வீடியோவையும் பார்க்க மாட்டேன்.
அப்படி பேசுபவர்களை பார்த்தல் கோபம் தான் வரும். இப்படி ஒருவர் பற்றி அவதூறாக பேசி... நீங்கள் போடும் வீடியோக்களுக்கு நிறைய வியூஸ் வருவதால், அதிக பணம் கிடைக்கிறதா?
மற்றவர்கள் குடும்பத்தை கஷ்டப்படுத்தி வர காசை வச்சு என்னதான் செய்யப் போறீங்க என பயில்வானை கலா மாஸ்டர் பங்கங்கம் செய்துள்ளார்.