ஒரே ஒரு மின்னஞ்சலால் மிகப்பெரிய கோடீஸ்வரரான நபர்! தரை துடைக்க சென்றவருக்கு நடந்தது என்ன?
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்குள் தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே வாழ்வில் பல நிலைகளை அடைய முடியும்.
ஆம் நம் மீது நமக்கு நம்பிக்கை இருந்தால், எந்தவொரு தோல்வியும் நமக்கு சோர்வாக இல்லாமல் அதனை வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றமுடியும். இங்கு அவ்வாறு தன்னம்பிக்கைக்கு ஒரு கதையினை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கம்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடித்து காட்டக் கோரினார்கள்.
நன்றாக துடைத்தான் பின்பு சிறிய நேர்காணல் வைத்துவிட்டு, இறுதியில் தகவல் கூறுவதற்கு குறித்த நபரிடம் மின்னஞ்சல் முகவரி கேட்டுள்ளனர்.
குறித்த நபர், ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இன்டர்நெட்டெல்லாம் தெரியாதே என்று கூறினார். கம்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? முகத்தினை சுழித்துக்கொண்டு அவரை அனுப்பிவிட்டனர்.
வேலை இல்லாமல் வெளியே வந்த நபருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நிலையில், கையில் இருந்த 10 ரூபாயை அவதானித்து பக்கத்தில் மார்கெட்டிற்கு சென்று வெங்காயம் வாங்கினார்.
அதனை எடுத்துக்கொண்டு பக்கத்து குடியிருப்பு பகுதிக்கு சென்று கூறி கூறி விற்றதில் 10 ரூபாய் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் வாங்கி விற்பனை செய்தான். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக விற்று சில வருடங்களில் மிகப்பெரிய வெங்காய வியாபாரி ஆகியுள்ளார்.
இத்தருணத்தில் வங்கி கணக்கு தொடங்குவதற்கு வங்கி அதிகாரி ஒருவர் குறித்த நபரை நேரில் சந்திக்க வந்துள்ளார். அவருடைய ஈமெயில் முகவரி கேட்டார் அதிகாரி.
அந்த வெங்காய வியாபாரியோ தன்னிடம் ஈமெயில் முகவரி இல்லை என்ற பதிலளித்ததும், அதிகாரி கூறினார்... மின்னஞ்சல் இல்லாமலே இந்த காலத்தில் இவ்வளவு முன்னேறிவிட்ட நீங்கள், மின்னஞ்சல், இன்டர்நெட் என்று தெரிந்திருந்தால்? என்று ஆச்சரியமாக கேட்டார்.
அதற்கு அந்த வெங்காய வியாபாரி, அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்யூட்டர் நிறுவனத்தில் தரை துடித்துக் கொண்டிருப்பேன் என்று கூறியுள்ளார்.
வாய்ப்புகள் விலகும்பேது கவலைப்படாதே... எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகப் பெரிய வெற்றி நமக்காக காத்திருக்கும் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.