குரு-செவ்வாய் அரிய சேர்க்கை! அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் 3 ராசியினர்
குரு மற்றும் செவ்வாய் கிரகங்களின் சிறப்பு சேர்க்கையினால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சேர்க்கை இவைகள் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
இந்த மாதம் இறுதியில் அதாவது ஜுன் 28ம் தேதி செவ்வாய் மற்றும் குருவின் சிறப்பு சேர்க்கை ஏற்படுவதால், லாப திருஷ்டி யோகம் என்ற மங்களகரமான யோகம் உருவாகின்றது.
இதனால் தைரியம், ஞானம், வெற்றி, செழிப்பு இவைகள் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. ஜோதிடத்தில் இவற்றின் அதிகாரியாக குருவும், ஆற்றல் மற்றும் உத்வேகத்திற்கு அதிபதியாக செவ்வாயும் காணப்படுகின்றது.
இந்த சேர்க்கை சில ராசியினருக்கு எதிர்மறையான ஆற்றலை கொடுத்தாலும் சில ராசியினருக்கு நன்மையையே அளிக்கின்றது.

மேஷம்
மேஷ ராசியினர் இந்த யோகத்தினால் நன்மையான பலனை அடைகின்றனர். சமூக அந்தரஸ்து மற்றும் அங்கீகாரத்தை அதிகரிக்கும்.
வாழ்வில் நிலவி வரும் நிதி சிக்கல்கள் அனைத்தும் முடிவிற்கு வரும் நிலையில், நீண்டகால ஆசைகள் இந்த காலகட்டத்தில் நிறைவுபெறும்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன், வியாபாரிகள் பெரிய லாபத்தை அடைவார்கள். வாழ்வின் பொற்காலமாக இருக்குமாம்.

கன்னி
கன்னி ராசியினருக்கு அற்புதமான யோகம் கிடைக்கும். நீண்ட காலம் நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வருவதுடன், வேலையில் இருப்பவர்கள் பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
வியாபாரிகளின் கடின உழைப்பு, முயற்சி புதிய உயரத்திற்கு எடுத்து செல்வதுடன், பெரிய லாபத்தையும் அனுபவிப்பார்கள்.
குடும்பத்துடன் நேரம் செலவிடவும், புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் கிடைப்பதுடன், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்குமாம்.

கும்பம்
கும்ப ராசியினருக்கு அபரிமிதமான நன்மை கிடைப்பதுடன், தன்னம்பிக்கை, மரியாதை அதிகரிக்கும்.
எதிர்பாராத அளவிற்கு நிதி நிலை வலப்பெறுவதுடன், கடன் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்திலும் நல்ல மாற்றத்தினை பெறலாம்.
குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |