ஜூலை 17 வரை இந்த 4 ராசிக்கும் ஆபத்து? உடனே இந்த பரிகாரத்தை செய்து தப்பியுங்கள்
மிதுனம் செல்லும் புதனால் சில ராசிக்காரர்களுக்கு சவாலான காலமாக இருக்கும்.
இப்போது புதன் மிதுன ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் மோசமான பலனை அல்லது அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதையும், புதனால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கான பரிகாரங்களையும் காண்போம்.
ஜூலை 17 வரை மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.
கடகம்
மின்னணு சாதனங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலர் இக்காலத்தில் ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு மனஅமைதி அடைவார்கள். வெளிநாட்டு வியாபாரிகளுக்கு ஆதாயம் உண்டு. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
புதன்கிழமையன்று பசுவிற்கு பச்சை புல் கொடுப்பது தோஷ நிவர்த்திக்கு பலன் தரும்.
விருச்சிகம்
இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உங்கள் ஆரோக்கியம் திடீரென்று மோசமடையும்.
இந்த ராசியைச் சேர்ந்த ஊழியர்கள் திடீரென்று சில பாதகமான மாற்றங்களைக் காணலாம். தேலையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் குடும்பத்தில் வெளிநாட்டில் வசித்து வந்தால், அவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சிலருக்கு விரைவான நிதி ஆதாயமும் உண்டு. புதனின் தோஷம் குறைய விநாயகப் பெருமானை வழிபடவும்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் சிறிய பிரச்சனைகள் கூட பெரிய சர்ச்சைக்கு வழிவகுக்கும்.
எனவே உங்கள் துணையுடன் நல்ல உறவை பேண முயலுங்கள். இக்காலத்தில் உங்கள் பேச்சுக்கள் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். பணிபுரிபவர்கள் பணிச்சுமையால் மன அழுத்தத்தை சந்திக்கக்கூடும்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். எனவே இக்காலத்தில் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
உங்களைப் புகழ்ந்தவர்களே உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களுக்கு எதிராகச் சதி செய்யலாம். எனவே கவனமாக இருங்கள்.
திருமண வாழ்க்கையிலும் சில முரண்பாடுகள் காணப்படலாம். குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடல்நலக்குறைவு உங்கள் கவலையை அதிகரிக்கலாம்.
புதன் பரிகாரங்கள்
- பச்சை நிறத்தில் ஆடைகளை அணியுங்கள்.
- உங்கள் சகோதரிகள் மற்றும் அத்தைகளை மரியாதையுடன் நடத்துங்கள்.
- புதனின் அதிபதியான விஷ்ணுவை வழிபடுங்கள்.
- புதன் கிழமைகளில் முழு பக்தியுடன் தர்மம் செய்யுங்கள்.
- ஜோதிட சாஸ்திரத்தில், தர்மம் செய்வது நல்ல செயல்களைச் செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.
- மரகத ரத்தினத்தை அணியுங்கள்.