வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம்
மாதம்பட்டி ரங்கராஜ் யார் எப்படி தன்னுடைய குடும்பத்தினருடன் இருந்தார் என்பது குறித்து ஜாய் கிறிஸில்டா மகன் பேசிய குரல் பதிவு சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கெஞ்சிய ஜாய் கிரிஸில்டா மகன்
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில், நீதித்துறை அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் பேட்டியெடுக்க வந்த தொகுப்பாளினியிடம் ஜாய் கிரிஸில்டா மகன் பேசிய குரல் பதிவோன்று வைரலாகி வருகின்றது. அதில், “ மாதம்பட்டி எனக்கு இனிப்பு பண்டங்கள் வாங்கி கொடுப்பார். என்னுடன் விளையாடுவார். அம்மாவை வயிற்றில் எட்டி உதைத்தார். அப்போது நான் அழுதேன். அவரை நான் மிஸ் செய்கிறேன். சில நேரம் அவரை நினைத்து அழுவேன்..” என கண்ணீருடன் பேசியிருந்தார்.
இந்த குரல் பதிவு மாதம்பட்டி ரங்கராஜ் எவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டுள்ளார் என்பதை காட்டுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |