என் கணவரை யாராவது கண்டீர்களா? கிண்டலாக ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பதிவு வைரல்
DNA பரிசோதனைக்கு தயார் என்று அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ் 15 நாட்கள் ஆகியும் இன்னும் வரவில்லை எங்கு தலைமறைவாக இருக்கின்றார்? யாராவது என் கணவரை பார்த்தீர்ஃகளா? என கிண்டலான பாணியில் ஜாய் கிரிஸில்டா தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா அண்மையில், தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து, கர்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

அதனால் நெட்டிசன்கள் ரங்கராஜை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் செய்தது இவர் முதல் மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என குறிப்பிடும் ஜாய் தன் குழந்தைக்கு நியாயம் வேண்டும் என போராடி வருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், ஜாய் கிறிஸில்டாவை தான் திருமணம் செய்து கொண்டதை மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டுடதாக தகவல்கள் வெளியாகி அண்மையில் வைரலானது.
அதனை தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்தும் தன்னை மிரட்டி திருமணம் செய்துக்கொண்டதாகவும், DNA பரிசோதனைக்கு நான் தயார் எனவும் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கை இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது.

அதனால் குழந்தை பிரசவித்து ஒரு சில வாரங்கள் கூட கடக்காத நிலையில், மீண்டும் நியாயம் கேட்டு சமூக ஊடக பக்கத்தில் ஜாய் பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் DNA பரிசோதனைக்கு நான் தயார் என்று அறிக்கை விட்டு 15 நாட்களுக்கு மேல் கடந்துவிட்ட நிலையிலும், இன்னும் பரிசோதனைக்கு வரவில்லை...தைரிமுள்ள ஆணாக இருந்தால், பரிசோதனைக்கு வாருங்கள் பெண்களை உங்கள் இஷ்டத்துக்கு எடுத்துக்கொள்ளாதீர்கள் என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.