மாதம்பட்டி ரங்கராஜூக்கு ஆப்பு உறுதி! முதல் மனைவியின் ரூட்டில் செல்லும் ஜாய் கிரிஸில்டா
மாதம்பட்டி ரங்கராிஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது சட்ட படிப்பில் களமிறங்கியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைராலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு அவபெயர் ஏற்படுத்துவதாகவும் அதனால் தனது நிறுவனத்துக்கு 15 நாட்களில் 12.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இரண்டாம் மனைவி மீது மாதப்பட்டி ரங்கராஜ் வழக்குப்பதிவு செய்திருந்தார்.
தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் ஜாய் கிரிஸில்டாவுடனான உறவை மாதம்பட்டி ரங்கராஜ் மறுக்கவில்லை என்பதால், ஜாய் கிரிஸில்டாவுக்கு இது குறித்து கருத்து தெரிவிக்க தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் புதிய பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் அவர். அதாவது தனது பயோவில், Law Student என்பதை சேர்த்திருக்கிறார். மேலும் தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
ரங்கராஜ் விஷயத்தில் எப்படியாவது நீதியை பெற்றுவிட வேண்டும் என்று போராடும் அவர்; ஒருபடி மேலே சென்று சட்டப்படிப்படை படிக்க ஆரம்பித்துவிட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளையும் பதிவு செய்து செய்துவருகிறார்கள். மாதம்பட்டி ரங்கராஜூன் முதல் மனைவி ஸ்ருதியும் வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
