திடீரென கட்டணத்தை உயர்த்திய jio நிறுவனம்.. கொந்தளிக்கும் பயனாளர்கள்
ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, நிறுவனத்தைத் தொடர்ந்து ஜியோ நிறுவனமும் தனது ப்ரீபெய்ட் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ள தகவல் பயனாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த நாட்களுக்கு முன்பு பாரதி ஏர்டெல் நிறுவனம் மற்றும், வோடஃபோன் ஐடியா, ஆகியவை தங்களின் ப்ரீ பெய்ட் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தன.
அப்போது ஜியோ நிறுவனம் மட்டும் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்து வந்தது. இந்நிலையில், டிசம்பர் 1ம் தேதி முதல் ப்ரீ பெய்ட் கட்டணத்தை 20 முதல் 21 சதவீதம் உயர்த்தி ஜியோ நிறுவனம் நேற்று இரவு அறிவித்துள்ளது.
மேலும், மற்ற நெட்வோர்க்குகளுடன் ஒப்பிடும்போது ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வு குறைவுதான். இதுகுறித்து ஜியோ நிறுவனம் தெரிவிக்கையில், உண்மையான டிஜிட்டல் வாழ்க்கையில் ஒவ்வொரு இந்தியரும் வலிமையாக இருக்கும் நோக்கில், தொலைத்தொடர்பு துறையை மேலும் வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இதற்காக ஜியோ புதிய unlimeted பிளானை அறிமுகப்படுத்துகிறது. நாங்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள் தொலைத்தொடர்பு துறையில் சிறந்ததாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான தொலைத் தொடர்பு வசதியை உலகிலேயே jio- மட்டுமே வழங்குகிறது.
ஜியோ வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்த பயனை அனுபவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகவலானது பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ட்விட்டரில் #BoycottJioVodaAirtel என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.