பிரபல சீரியல் நடிகர் தற்கொலை! பேரதிர்ச்சியில் திரையுலகம்
மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்திய லோகேஷ் ராஜேந்திரன், திடீரென தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் லோகேஷ்
90ஸ் கிட்ஸால் மறக்க முடியாத சீரியல்கள் என்றால் அது ஜீ பூம் பா மற்றும் மர்மதேசம் ஆகிய தொடர்கள் தான். குழந்தைகளை கவரும் வகையில் எடுக்கப்பட்ட இந்த தொடர்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் பலரும் இன்று சினிமாவில் கலக்கி வருகின்றனர்.
மர்மதேசம் தொடரில் குட்டி ராசுவாக நடித்து அசத்தியவர் லோகேஷ். இவர் ஜீ பூம் பா தொடர் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.
இவருக்கு நடிப்பை விட படம் இயக்குவதில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் அது சம்பந்தமான வேலைகளை செய்து வந்ததுடன், சில குறும்படங்களையும் இயக்கி மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றார்.
லோகேஷ், விரைவில் சினிமாவில் இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை
இவரது தற்கொலைக்கான காரணம் குடும்பத்தில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை என்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக அவரது தந்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருந்த லோகேஷின் இந்த திடீர் தற்கொலை முடிவு அவரது நண்பர்களையும், உறவினர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.