உன் குழந்தையின் சாபம் சும்மா விடாது! ஜாய் கிரிஸில்டாவின் காட்டமான பதிவு வைரல்
ஒருவன் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அலைகிறான்... என காட்டமாக தற்போது ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றாது.
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிஸில்டா
அண்மைகாலமாக இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விடயம் என்றால், அது மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா இரண்டாம் திருமண சர்ச்சை தான்.
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா தற்போது மீடியாவிடம் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதனை தொடர்ந்து தனது நிறுவனத்திற்கு அவபெயர் ஏற்படுத்துவதாகவும் அதனால் தனது நிறுவனத்துக்கு 15 நாட்களில் 12.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இரண்டாம் மனைவி மீது மாதப்பட்டி ரங்கராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறாக பேசி வெளியிட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து கண்ணீருடன் ஊடகங்களிடம் பகிர்ந்துக்கொண்ட ஜாய், பணம் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது இப்போது வரையில் என் வயிற்றில் வளரும் அவரின் குழந்தைக்கு எந்த பதிலும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜாய் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
அதன் பின்னரும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மாதம்பட்டி ரங்கராஜ் தனது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில், ஒருவன் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அலைகிறான்... என காட்டமாக சில விடயங்களை குறிப்பிட்டு தற்போது ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

