Ethirneechal: வலியால் துடிதுடித்த ஜனனி... குணசேகரனின் சதியா இது?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறிய ஜனனி தற்போது காலில் அடிபட்டு வலியால் துடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் தற்போது தனது மாமியார் விசாலாட்சிக்காக வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.
ஜனனி இன்னும் வீட்டிற்குள் இல்லாமல் வெளி வேலையில் கவனம் செலுத்திய நிலையில், குணசேகரன் இதனை தடுப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகின்றார்.
குணசேகரனின் சூழ்ச்சியினை அறிந்த ஜனனி, அவருக்கு ஒரு ஸ்வீட் சர்ரைஸ் கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் இறுதியில் அவர் கால் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மாடியிலிருந்து பூ தொட்டி விழுந்தது குணசேகரன் சதியா? என்பதை தெரியாமல் பார்வையாளர்கள் யோசித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |