ஜல்லிக்கட்டில் காளையை அவிழ்த்துவிட்ட சிறுமி: பரிசு வாங்க மறுத்தது ஏன்?
இந்தியாவில் பொங்கல் பண்டிகையில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நேற்று அவனியாபுரத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று பாலமேட்டிலும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.
சில ஆண்டிற்கு முன்பு இந்த வீர விளையாட்டிற்கு தடைவிதித்த போது உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் இதற்காக போராடி இறுதியில் அனுமதி வாங்கினர்.
மேலும், நேற்று பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கி மாலை 5.10 மணி வரை நடந்து முடிந்தது.
தமிழக அரசின் கட்டுப்பாடுகளின் படி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனைக்கு பின்பு விளையாட அனுமதித்துள்ளனர்.
50 வீரர்களாக பிரிக்கப்பட்டு 7 சுற்றுகளாக நடத்தப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வீரர்களுக்கும், காளைக்கும் பரிசு வழங்கப்படும்.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த யோகதர்ஷினி ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு வாங்காமல் சென்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மதுரை ஐராவதநல்லூர் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் யோகதர்ஷினி தான் வளர்த்து வந்த காளையை நேற்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களமிறக்கினார்.
அப்போது அவரது காளை பிடிமாடாக சென்றதால், அவருக்கு சிறப்பு பரிசு கொடுப்பதற்கு விழா குழுவினர் அழைத்த போது யோக தர்ஷினி தனக்கு பரிசு வேண்டாம் என்று கையை அசைத்துவிட்டு சென்றுள்ளார்.
இதற்கு குறித்து மாணவி கூறுகையில், தன்னுடைய மாடு தொடர்ந்து பிடிமாடாகி வருவதால் தனக்குப் பரிசு வேண்டாம் என்று தான் அந்தப் இளம்பெண் ஒதுங்கி போவதாக கூறப்படுகிறது.
மேலும் நான் அந்த சிறப்பு பரிசினை வாங்கி எனது காளையின் வீரத்தினை குறைவாக காட்ட விரும்பவில்லை என்றும், தனது காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசு கிடைப்பது தான் நியாயம் என்று கூறியுள்ளார்.