ஐபிஎல் 2022; தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர்கள்.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்;
ஐபிஎல் 2022-ம் ஆண்டுக்கான தொடரில் வீரர்களுக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் பெங்களூருவில் நடைப்பெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாகவே பழைய அணிகள் தக்க வைக்கும் வீரர்களை பெயர்களை வெளியிட்டு இருந்தன. அதன் பின்னர், புதிதாக சேர்ந்த லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளும் புதிய கேப்டன்களான ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா பெயரை அறிவித்து, முழு சம்பள விபரங்களையும் வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து, எஞ்சிய வீரர்களை தேர்வு செய்யும் மெகா ஏலத்தில் மட்டுமே 1214 வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளார்கள். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் தற்போது முதலே ஐபிஎல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாகவும் கொரோனா காரணமாகவும் விலகி வருகின்றனர்.
அதில் முக்கியமான 7 வீரர்களான, கிறிஸ் கெயில், மிட்செல் ஸ்டார்க், ஜோ ரூட், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஓக்ஸ் இவர்கள் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.