இனி ஆர்சிபி டி சர்ட் வேண்டாம்... மைதானத்திலேயே காத்திருந்த சிறுவனுக்கு ராஜஸ்தான் வீரர் கொடுத்த பரிசு!
ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டியில், பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது.
அதிரடியாக விளையாடி அணிக்காக வெற்றியை தேடி தந்த ஜாஸ் பட்லர் 106 ரன்களை அடித்து வெற்றிக்கு உறுதுணையாக களத்தில் இருந்தார்.
இதனால், பைனல் போட்டிக்கு ராஜஸ்தான் அணி தகுதி பெற்றது. 2008க்குப் பின் 13 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அசத்தியுள்ளது.
இந்த போட்டியின் நரேந்திர மோடி மைதானத்தில் 80,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்றுகூடி இப்போட்டியை கண்டு களித்தனர். இரவு 12 மணியை கடந்தும் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் மட்டும் ராஜஸ்தான் அணியின் வீரரான ட்ரெண்ட் போல்ட்டை பார்ப்பதற்காக காத்திருந்துள்ளார்.
இதனை அறிந்த ட்ரெண்ட் போல் உடனடியாக அந்த ரசிகரை அருகே வரவழைத்து பேசி, அன்பின் அடையாளமாக தனது ஜெர்சியை கழற்றி கொடுத்துள்ளார்.
அதேப்போல் அந்த குட்டி பையன் 15 வருடமாக தோற்று வரும் பெங்களூர் டி ஷர்ட் வேண்டாம் என கழற்றி ட்ரெண்ட் போல்டின் டி ஷர்ட்டை உடனடியாக அணிந்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது.
How can you not love Trent Boult? 😍
— Rajasthan Royals (@rajasthanroyals) May 28, 2022
Watch him make a young fan's day after #RRvRCB. 💗 pic.twitter.com/YrWgRsAgsN