மும்பை அணியில் இஷானுக்கு பதிலாக ஏன் சூர்யகுமார் சேர்க்கப்பட்டார் தெரியுமா?
ஐபிஎல் 2022 ஆண்டுக்கான மெகா ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தக்க வைக்கும் வீரர்கள் விவரங்களை வெளியிட்டு இருந்தது. அந்த வகையில், எதிர்பார்த்த வீரர்களை எல்லாம் விடுவித்து அதிகம் ஜொலிக்காத வீரர்களையே ஒவ்வொரு அணியும் தக்க வைத்து இருக்கிறது.,
அந்த வகையில், மும்பை அணியில் ரேகித் சர்மா, பும்ரா மற்றும் பெல்லார்ட் இறுதியாக சூர்யகுமார் யாதவை தக்கவைத்தது. ஆனால், இஷான் கிஷானை தக்க வைக்கும் என எதிர்பார்த்த நிலையில், இப்படி ஒரு ட்விஸ்ட் கொடுத்தனர்.
அதற்கு முக்கியகாரணமே இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் இரண்டு வீரர்களுமே கடந்த 2018-ம் ஆண்டு மெகா ஏலத்தின் போது தான் மும்பை அணிக்குள் வந்தவர்கள்.
கடந்த 4 சீசன்களில், ஏராளமான சாதனைகளை இருவரும் செய்திருந்தாலும், புள்ளிவிவரங்களின் படி சூர்யகுமார் யாதவின் கைதான் ஓங்கியுள்ளது. இந்த 4 சீசன்களிலும் சூர்யகுமார் 300+ ரன்களை அடித்துள்ளார். ஆனால் இஷான் கிஷான் ஒரே ஒரு முறை மட்டுமே 300+ ரன்கள் குவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி சூர்யகுமார் யாதவ், தனது நிலையான ஃபார்மினால் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெற்று அதிக போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இது முதன்மை காரணமாகும்.
மேலும், ஒவ்வொரு அணியுமே தங்களின் உள்ளூர் வீரர்களையே தக்க வைக்க நினைக்கும். அதேப்போல், சூர்ய குமாரும் மும்பையை சேர்ந்தவர், உள்ளூர் போட்டிகளிலும் கேப்டனாக பணியாற்றி வெற்றிபெறச் செய்துள்ளார்.
அடுத்து மிகமுக்கியமாக சூர்யகுமார் நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவரைப்போன்று ஜொலிக்க வேறு நல்ல வீரரை தேர்ந்தெடுப்பது கடினம். இவரை ஏலத்தில் விட்டால் திரும்ப எடுப்பதும் கடினம் தான்.
ஆனால் இஷான் கிஷனை எடுக்க சிக்கல் குறைவு தான். ஏனென்றால் ஓப்பனிங் பேட்டிங்கில் அனைத்து அணிகளும் கை ஓங்கி தான் இருக்கிறது.
இதனால், கிஷானை எடுக்க முடியாவிட்டாலும், அவரின் இடத்தை பிடிக்க டி காக் மற்றும் கிறிஸ்லின் போன்ற அனுபவ வீரர்கள் உள்ளனர். இதனாலேயே அவரை தக்கவில்லை என கூறப்படுகிறது.