ஐபிஎல் 2022: மெகா ஏலத்தில் இந்த வசதி ரத்தாம்.. ஒரு அணிக்கு எத்தனை வீரர்களை தக்க வைக்க வேண்டும்?
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கொல்கத்தா அணியை வீழ்த்தி 4 வது முறையாக கோப்பையை வென்றது. இதன்பின்னர், இந்திய அணி டி20 உலககோப்பையில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
பலம் வாய்ந்த இந்திய அணிக்கு டி20 யை வெல்ல ஒரு அரிய வாய்ப்பாக இருக்கிறது. உலககோப்பை முடிந்த கையோடு இந்திய அணிக்கு, இங்கிலாந்து அணியுடன் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளின் அட்டவணையையும், பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துகொள்ளலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல்லில் புதிதாக இரண்டு அணிகள் ஏலத்திற்கு வருகின்றன. இதனால் பழைய அணிகளும் சேர்த்து ஏலத்திற்கு முன்பாகவே 3 வீரர்களை நேரடியாக தக்க வைத்துக்கொள்லாம் என பிசிசிஐ தெரிவித்து இருந்தது.
தற்போது வெளியான தகவலின் படி, ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களையும் 2 அயல்நாட்டு வீரர்களையும் தக்க வைக்கலாம் எனவும் மொத்தமாக 4 வீரர்களை மட்டும் அணியில் வைத்துக்கொள்ள முடியுமாம்.
இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ90. கோடி வரை மட்டுமே செலவு செய்யலாம். ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள நினைத்தால், மொத்த தொகையில் இருந்தே ரூ.35 அல்லது 40 கோடிகளுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீத இருக்கும் தொகையை வைத்து தான் மற்ற வீரர்களை வாங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டிலும், ஒரு அணிக்கு RTM கார்டு என்ற வசதியும் கொடுக்கப்படும்.
அதாவது ஒரு அணி எடுத்த வீரரை போட்டியில் தக்கவைக்காமலே இருந்தால் அப்போதே அந்த கார்டை பயன்படுத்தி மற்ற அணிகள் அந்த வீரரை வாங்கி கொள்ளலாம்.
ஆனால் இந்த முறை அந்த வசதி ரத்து செய்யப்பட்டுகிறதாம். இதுவரை அப்படி எந்த அணியும் அப்படி மாற்று வீரர்களை வாங்கியது இல்லை என்பதும் அறிந்ததே..