இந்த ஆண்டின் ஐபிஎல் வின்னர் ஆர்சிபி அணிதானா? பிசிசிஐ-க்கே ஷாக் கொடுத்த சம்பவம்!
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் பாதிலேயே நிறுத்தப்பட்டது. மேலும், ஐபிஎல் அணி வெளிநாட்டு வீரர்களும், சொந்த நாட்டுக்கு சென்றனர்.
இதன்பின் செப்டம்பர் மாதத்தில் ஐபிஎல் மீண்டும் நடத்தப்படலாம் என தெரிவித்து வந்தனர். இதனிடையே, ஐபிஎல் 2021 தொடர் முழுமையாக நடைபெற்றால், ஆர்சிபி அணி தான் சாம்பியன் என நபர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆதிஷ் ஜெயின் என்ற ஆர்சிபி ரசிகர் ஒருவர், Reddit தளத்தில், சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், Python program படி, பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று கூறுகிறார்.
மேலும், இதுகுறித்து பேசிய அவர், கடந்த கால டேட்டாக்களை, predictive analysis மற்றும் randomization நுட்பங்களைப் பயன்படுத்தி ஐபிஎல்லின் முழு சீஸனின் பிளே ஆஃப்களைத் தவிர்த்து வெற்றி தோல்விகளை கண்டறிய பைதான் திட்டத்தை உருவாக்கினேன்.
அதில், ஒவ்வொரு வீரரின் கடந்த ஐந்து ஆண்டுகளின் டேட்டாக்களை பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்காக நான் பிரித்தெடுத்தேன். ஒரு பேட்ஸ்மேன் எந்தெந்த வகையில் ரன்கள் எடுத்தார் என்று ஆராய்ந்தேன்.
சிங்கிள்ஸ், டபுள்ஸ், பவுண்டரிகள் அல்லது சிக்ஸர்கள் என ரன்கள் எடுக்கப்பட்ட விதத்தை தரம் பிரித்தேன். பந்து வீச்சாளர்கள் எந்தெந்த வகையில் ரன்களை லீக் செய்தார்கள் என்பதை கணக்கிட்டேன்.
அதிலும், பவர் பிளே, மிடில் ஓவர்கள் அல்லது டெத் ஓவர்ஸ் என்று அனைத்து வித ஓவர்களில் எவ்வளவு ரன்கள் போனது என்று ஆராய்ந்தேன்.
மேலும், என்னென்ன விதத்தில் அதிகமாக பேட்ஸ்மேன்களை பவுலர்கள் வெளியேற்றினர், அதற்கு நேர்மாறாக எந்தெந்த விதத்தில் பேட்ஸ்மேன்கள் அவர்களாகவே வெளியேறினார்கள் என்றும் ஆராய்ந்தேன்.
மொத்தம் போடப்பட்ட வைடுகள், நோ-பால், ஆவரேஜ் கேட்சுகள் என்று சகல டேட்டாக்களை கொண்டு எனது ஃபார்முலாவை உருவாக்கினேன்.
இந்த கணக்கீட்டின் படி, ஐபிஎல் 2021 இறுதிப் போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெறும் என்று அவர் கணித்துள்ளார்.
இவரது கணிப்பு படி, ஆர்சிபி, டெல்லி, சென்னை, பஞ்சாப் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆஃப்க்குள் நுழைகிறது.
இறுதியாக, குவாலிஃபயர் 1 - DC v RCB (RCB வெற்றி) எலிமினேட்டர் - CSK v PBKS (PBKS வென்றது) குவாலிஃபயர் 2 - PBKS v DC (DC வெற்றி) இறுதிப் போட்டி RCB v DC-க்கு இடையே நடைபெறும் போட்டியில், பெங்களூரு வெற்றி பெறும் என்று தனது ஃபார்முலாவை முடிக்கிறார்.
இந்த தகவல் ஆர்சிபி ரசிகர்களிடம், வைரலாக பரவி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.