சர்வதேச பாம்புகள் தினம் 2025: பாம்புகள் பழிவாங்குமா? அறிவியல் உண்மை இதுதான்
பொதுவாகவே அனைவருக்கு தெரிந்த சில விடயங்கள் உண்மையா இல்லையா என்ற குழப்பம் தொன்று தொட்டு இருந்துக்கொண்டே இருக்கும்.
அப்படிப்பட்ட விடை தெரியாத விடயத்தில் ஒன்று தான் பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்தும். இது பற்றி அனைவரும் அறிந்திருந்த போதும் இதில் எந்தளவுக்கு உண்மையிருக்கின்றது என்பதிதில் பெரும்பாலானவர்களுக்கு மாற்றுகருத்து காணப்படுகின்றது.
பாம்புகளை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 16ஆம் தேதி உலக பாம்புகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்த பிராணிகள் ஆகும். சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகளவில் 3,000 வகையான பாம்பினங்களும், இந்தியாவில் 280 வகையான பாம்புகளும் வாழ்கின்றன.
அந்தவகையில் பாம்புகள் தினமான இன்று பாம்புகளுக்கு பழிவாங்கும் குணம் உண்மையில் இருக்கின்றதா என்பது குறித்து அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்கின்றது என தெரிந்துக்கொள்வோம்.
பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்து பலநூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. சினிமா படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் பாம்புகள் பழி வாங்குவது போன்ற காட்சிகளை ஒளி பரப்புகிறார்கள். உண்மையில், பாம்புகள் பழிவாங்குமா என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?
பாம்புகள் பழிவாங்குமா?
அறிவியலின் அடிப்படையில் பாம்புகள் ஒருபோதும் யாரையும் பழிவாங்குவதும் இல்லை வேண்டும் என்று தீண்டவதும் இல்லை. உண்மையில் பாம்புகள் மிகவும் சாதுவானது. மனிதர்களை கண்டு பயந்து ஒதுங்கி போகவே விரும்புகின்றது.
அது போகும் பாதையை மறைப்பது, அதனை தாக்குவது போன்ற செயல்களிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவே பாம்பு சில சமயங்களில் மனிதர்களை கடிக்கின்றது.
பாம்புகளுக்கு விஷம் இருப்பது இரையை வேட்டையாடுவதற்கும் எதிரிகளிடமிருந்து தற்களை தற்காத்துக்கொள்வதற்கும் மட்டுமே என அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
தனது துணையை யாராவது கொன்றுவிட்டால் இன்னொரு பாம்பு பழிவாங்க வரும் என்ற கருத்தும் கூட முன்னைய காலத்தில் இருந்தே நிலவிவருகின்றது. தனது ஜோடி பாம்பு கொல்லப்பட்ட இடத்தில் மற்றொரு ஜோடி பாம்பு சுற்றிக் கொண்டே இருக்கும்.
இது பழிக்கு பழி வாங்குவதற்காக வந்திருக்கின்றது என்ற கருத்து நிலவினாலும் உண்மையில் பாம்புகளின் பிறப்பு உறுப்புகளுக்கு அருகில் இருக்கும் சுரப்பி, அவற்றைக் கொல்லும் போது பல முறை வெடிக்கிறது. அதனால் ஒரு அற்புதமான வாசனை வெளியாகின்றது.
குறித்த வாசனை மற்ற பாம்புகளை ஈர்க்கும் தன்மை கொண்டது. அதன் காரணமாகவே ஒரு பாம்பு இறந்த பிறகு, மற்ற பாம்புகள் அந்த இடத்தில் அடிக்கடி உலாவுகின்றன. இந்த சுரப்பியில் இருந்து வெளிப்படும் வாசனை பெண் பாம்புகளை அதிகமாக பாதிக்கும்.
ஆனால் அதை கொன்றவரை பழி வாங்குவதற்காக மற்ற பாம்பு வந்திருப்பதாக கிராமபுற மக்கள் நம்பினார்கள். இதன் விளைவாகவே பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்து பரவியது. அதுமட்டுமன்றி பாம்புகளால் எதையும் நீண்ட நேரம் நினைவில் வைத்திருக்க முடியாது.
ஏனைய உயிரினங்களுடன் ஒப்பிடும் போது பாம்புகளுக்கு நினைவாற்றல் மிகவும் குறைவாகவே உள்ளது என ஆய்வுகள் குறிப்பிகின்றது.
எனவே பாம்புகள் பழிவாங்கும் என்பது அறிவியல் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையாகவே இருக்கின்றது. அதில் எவ்வித உண்மையும் ஆதாரமும் இதுவரையில் இல்லை.
உணவு சங்கிலியின் தொடர்ச்சியான நிலவுகைக்கும் விவசாயம் சீராக நடைபெறவும் பாம்புககள் நிலைத்திருக்க வேண்டியது அவசியம்.
பாம்புகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவே சர்வதேச பாம்புகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |