இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட நட்பு... இறுதியில் கடத்தலில் முடிந்த கொடுமை! பின்னணியில் நடந்தது என்ன?
கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பு இறுதியில் குழந்தையை கடத்தும் அளவிற்கு சென்றுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்(23). தச்சு வேலை செய்து வரும் எப்பொழுதம் இன்ஸ்டாகிராமில் ஆக்டீவ்வாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டா மூலம் தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகனாம்பிகை என்பவருடன் நட்பு எற்பட்டுள்ளது.
மோகனாம்பிகைக்கு திருமணமாகி குழந்தை மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். சரவணகுமாருடன் ஏற்பட்ட நட்பு பணம் கொடுத்து வாங்கும் வரை சென்றுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு மோகனாம்பிகை 1.50 லட்சம் சரவணகுமாரிடம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பித் தருவதாக கூறிவிட்டு, அப்பணத்தில் தனது கணவருக்கு கார் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனால் பணத்தினை திருப்பிக் கொடுக்காத இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், சரவணகுமார் மோகனாம்பிகை வீட்டிற்கு சென்றும் பணத்தினை கேட்டுள்ளார்.
குறித்த பெண் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த சரவணகுமார் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அவரது மகனை கடத்திவிட்டு கோவைக்கு சென்றுள்ளார்.
வெளியில் விளையாட சென்ற மகன் வெகுநேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில், தர்மபுரி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து கோவை வந்த தர்மபுரி பொலிசார் வடவள்ளி பொலிசின் உதவியுடன் சிறுவனை மீட்டதோடு. சரவணகுமாரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
