இமாலய இலக்கை கடந்து அபார வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா - கதறிய இந்திய பவுலர்கள்;
ஐபிஎல் முடிந்த கையோடு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. அதன் படி முதல் போட்டி ஜூன் 9-ஆம் தேதியன்று இன்று துவங்குகியது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடிக்காட்ட ருதுராஜ் 23 ரன்னில் பர்னல் ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார்.
இமாலய இலக்கு
அதன் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கிஷான் பொறுப்பான ஆட்டத்தை ஆடி வந்த நிலையில், 36 ரன்களில் ஸ்ரேயாஸ் அவுட் ஆக, பின்னர் அதிரடியை காட்டிய கிஷானும் 76 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியாக ரிஷப் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. பண்ட் ஆவுட் ஆனது 210 ரன்களை இந்திய அணி அடித்தது. ஹர்திக் பாண்டியா 31 ரன்களையும், கேப்டன் ரிஷாப் பண்ட் 29 ரன்களையும் அடித்தனர்.
இதனால் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய செளத் ஆப்பிரிக்கா அணியில் தொடக்கத்திலேயே கேப்டன் பவுமா 10 ரன்னில் புவனேஷ்வர் குமார் ஓவரில் அவுட் ஆகினார்.

கதறவிட்ட மில்லர் வெண்டர் சன் ஜோடி
பின், பிரிட்டோரியஸ் அதிரடியால் 29 ரன்னில் வெளியேற, டிகாக் 22 ரன்னில் அவுட் ஆகி திக்குமுக்காடினார்கள். இவர்களை அடுத்து, ஜோடி சேர்ந்த மில்லர் மற்றும் வெண் டர் சன் நிதான ஆட்டத்தை ஆரம்பத்தில் தொடங்கி பின் பவுண்டரி சிக்ஸர் என பறக்க விட்டனர்.
இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய அணி திணற ஒரு கட்டத்தில் இந்த ஜோடி 19.1 ஓவரிலேயே 212 ரன்களை அடித்து அபார வெற்றியை பதிவு செய்தது. மில்லர் 64 ரன்கள் 5சிக்ஸரும், வெண் டர் சன் 75 ரன்கள் 5 சிக்ஸருடன் நாட் களத்தில் இருந்தனர்.

அபார வெற்றி
இதனால் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பெரிய ஸ்கோரை கடந்த முதல் அணியாக செளத் ஆப்பிரிக்கா வெற்றியை கொண்டாடுகிறது.
இந்திய அணியில், அறிமுக வீரரான ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.