இந்தியாவில் 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு; 4 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை!
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது.
இதையடுத்து, நேற்று 80,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டநிலையில், மேலும் 3,303 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 72 நாட்களில் இல்லாத குறைந்த அளவாக புதிதாக 70 ஆயிரத்து 421 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 3,921 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,74,305 ஆக உயர்ந்து உள்ளது.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 48 லட்சத்து 49 ஆயிரத்து 301 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.