விசில் அடித்ததும் பறந்து வரும் வௌவால்கள்..... வியக்க வைத்த அழகிய காட்சி
புதுச்சேரியில் விசில் சத்தம் கேட்டதும் வௌவால் பறந்து வந்து கையிலிருக்கும் பழத்தை சாப்பிடும் காட்சி வெளியாகியுள்ளது.
கன்னிக்கோவில் பகுதியில் வாழை மரங்களில் உள்ள பழங்களை வௌவால்கள் வழக்கமாக உண்டு வந்துள்ளன.
இந்நிலையில் மழையால் மரங்கள் சாய்ந்ததால் செய்வதறியாது அவைகள் சுற்றி திரிந்த நிலையில், அங்கிருந்த ஒருவர் மதில் சுவரின் மேல் பழங்களை வைத்துள்ளார்.
அதை உண்டு வந்த வௌவால்கள் தற்போது அவர் விசில் அடித்து அழைத்ததும் பறந்து வந்து அவரது கையிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு செல்கின்றன.
இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.